விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்!

திண்டிவனம் அருகே குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் பலியானார்கள்.

Google Oneindia Tamil News

திண்டிவனம்: திண்டிவனம் அருகே குளத்தில் குளித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் அக்கா - தம்பிகள் என்பது மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ளது தளவாதி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் அபிராமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் அபிராமி பிளஸ் 2 படித்து வருகிறார்.

4 Dead drowned in pond near Tindivanam

இவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் அவரது தம்பி ஆகாஷூம் குளிக்க உடன் வந்தார்கள். அஸ்வினிக்கு வயது 15, ஆகாஷுக்கு வயது 9 ஆகிறது. 2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து குளிக்க தொடங்கினார்கள்.

அப்போது 4 மாணவர்களுமே குளத்தில் மூழ்கி திடீரென மாயமானார்கள். குளிக்க வந்த பிள்ளைகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று குளத்துக்கு வந்து பார்த்தால் அவர்களை காணவில்லை. இதனால் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

அக்கா-தம்பிகளான இந்த 4 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
4 Students Dead drowned in pond near Tindivanam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X