குளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்!
திண்டிவனம் அருகே குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் பலியானார்கள்.
திண்டிவனம்: திண்டிவனம் அருகே குளத்தில் குளித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் அக்கா - தம்பிகள் என்பது மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ளது தளவாதி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் அபிராமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் அபிராமி பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் அவரது தம்பி ஆகாஷூம் குளிக்க உடன் வந்தார்கள். அஸ்வினிக்கு வயது 15, ஆகாஷுக்கு வயது 9 ஆகிறது. 2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து குளிக்க தொடங்கினார்கள்.
அப்போது 4 மாணவர்களுமே குளத்தில் மூழ்கி திடீரென மாயமானார்கள். குளிக்க வந்த பிள்ளைகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று குளத்துக்கு வந்து பார்த்தால் அவர்களை காணவில்லை. இதனால் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
அக்கா-தம்பிகளான இந்த 4 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.