சுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த கம்பூர் கிராமத்தை சேர்ந்த முருகன்-மேகலா தம்பதியரின் பெண் குழந்தை ரித்திகா (4). இவர் இன்று ஒரு சில குழந்தைகளுடன் அருகே உள்ள பண்ணைக் குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரித்திகா நீரில் மூழ்கியுள்ளார். சக குழந்தைகள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தகவல் அறிந்ததும், ஓடிப்போய், குழந்தையை பண்ணை குட்டையிலிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்திலேயே அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 4வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோக வடுக்களே ஆறாத நிலையில், மற்றொரு பிஞ்சு குழந்தை இப்படி அநியாயமாக உயிரை இழந்துள்ளது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உலகம் உள்ளது என்பதை அறிவார்களா?