அடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் அடுத்த ஒன்றரை மாதத்தில் தீர்ப்பு வரும்... அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திண்ணை பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு திமுகவே காரணம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அப்பட்டமான பொய். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
சகாயத்துடன் இணைகிறாரா விஜய் ? தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திப்பது திமுக. தமிழகத்தில் ஒரு பெரும்பான்மை ஆட்சிக்கு மொத்தம் 117 எம்.எல்.ஏக்கள் தேவை. எடப்பாடி அரசுக்கு 5 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் கூடுதலாக உள்ளனர்.
ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. இத்தீர்ப்பு வரும்போது முதல்வர் எடப்பாடி அரசு கவிழும். முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகுவார்.
திமுக ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று தமிழகத்தை விரும்பாமல் வெளி மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் செல்கின்றன. திமுக ஆட்சியில்தான் விக்கிரவாண்டி தொழிற்பேட்டையை அறிவித்தோம். அடுத்து திமுக ஆட்சி அமையும் போது அந்த தொழிற்பேட்டையை செயல்படுத்துவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.