யார் இந்த ராஜா?.. சிக்கி சிதைந்த பெண்கள் எத்தனை பேர்.. பொள்ளாச்சியை விஞ்சிய கொடுமை
பெண்களை சீரழித்த பைனான்சியர் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்
Recommended Video
கள்ளக்குறிச்சி: கரும்பு தோட்டத்தில் நுழைந்து இத்தனை பெண்களையும் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ராஜா என்பவர் யார்? இந்த துணிச்சலுக்கு என்ன காரணம்?
கள்ளக்குறிச்சியில் 2 நாளைக்கு முன்பு போலீசில் ஒரு பெண்ணின் தாயார் புகார் தந்திருந்தார். அதில், 2 பேர் தன் மகளை ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டி, தொல்லை தருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை வழக்கமான கேஸ் போலதான் போலீஸ் நினைத்தது. இதில் சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தது. அதில் ஒருவர்தான் ராஜா. அம்மன் நகரை சேர்ந்த இவர் பைனான்சியராக இருக்கிறார். வயசு 45. செழிப்பான மனுஷன் என்பதால், குள்ளக்கருப்பன் கோயில் பின்பக்கம் இவருக்கு சொந்தமாகவே 4 ஏக்கர் கரும்பு தோட்டம் இருக்கிறது.
தினம் ராத்திரி என்னென்ன நடக்குது தெரியுமா.. கொதித்து பேசி வீடியோ வெளியிட்ட விவசாயி
இந்த கரும்பு தோட்டத்துக்கு பின்னாடிதான் ஏரி ஒன்று உள்ளது. இங்கு லவ் ஜோடிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம் போல. இவர்களிடம்தான் ராஜா போலீஸ் என்று சொல்லி பேசி மிரட்டுவாராம். அப்படி பயந்து போகும் பெண்களை அவருடைய கரும்பு தோட்டத்துக்கு அழைத்து ஆசைக்கு பணிய வைப்பாராம். இதை மறைந்திருந்து அவருடைய நண்பர்கள் வீடியோ எடுப்பார்களாம். இப்படியே கடந்த 6 மாசமாக நடந்து வந்திருக்கிறது.
பொள்ளாச்சி சம்பவம் நாட்டை உலுக்கியபோதுகூட, இந்த கும்பல் இப்படிப்பட்ட செயலில்தான் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். தன்னை போலீஸ் என்று சொல்லி ஏமாற்றிய இந்த ராஜாவுக்கு பின்னணி பலம் யாராவது உள்ளார்களா? வெறும் பணம் உள்ள தைரியத்தில் மட்டுமே இந்த அநாகரீக செயலில் இறங்கினாரா என்று தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ராஜாவின் செல்போனில் ஏகப்பட்ட ஆபாச வீடியோ இருப்பதால், விசாரணை இன்னும் பலமாகும் என தெரிகிறது. அதன்மூலம் ஏகப்பட்ட சமாச்சாரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.