செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
விழுப்புரம்: செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிக மோசமானதாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,29,893 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,112 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமனோஷ் கோஷ் மரணமடைந்தார்.
தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா என்றாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்... நம்பிக்கையூட்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
மேலும் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இதனால் அவர் சென்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார். திமுகவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான்.