விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி

Google Oneindia Tamil News

Recommended Video

    விஷக் குளவி கொட்டியதால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-விற்கு நிகழ்ந்த சோகம் !

    விழுப்புரம்: குளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருசோத்தமனின் இறப்பு பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநிலத்தின் அதிமுக செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். இவர் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தார். இவருக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விவசாய நிலம் உள்ளது.

    Edappadi pays tribute to Ex MLA Purushothaman

    அங்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வந்தன. பெரும்பாலும் இந்த பணிகளை புருஷோத்தமனே செய்வார். இந்த நிலையில் அதிக விஷத்தன்மை கொண்ட செங்குளவி, நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த புருஷோத்தமனை கொட்டியது.

    இதனால் வலி தாங்காமல் புருஷோத்தமன் அலறி துடித்தார். பின்னர் அங்கிருந்த தொழிலாளர்கள் புருஷோத்தமனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

    அதிமுக கூட்ட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக?அதிமுக கூட்ட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக?

    இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட புருஷோத்தமனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் புருஷோத்தமன் இனிமையானவர், கடும் உழைப்பாளி.

    அவரது உழைப்பை கண்ட ஜெயலலிதா அவருக்கு புதுவையில் நல்ல பதவியை வழங்கினார். புருஷோத்தமனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.

    English summary
    CM Edappadi Palanisamy pays tribute to ADMK EX MLA Purushottaman in Villupuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X