விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசியம் செய்யும் சாமியார் டேனியல்.. மகளுக்காக பணத்தை தொலைத்த முருகேசன்.. திண்டிவனத்தில் அக்கப்போர்

12 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    புதையல் எடுப்பதாக ரூ.12 லட்சம் மோசடி: போலி சாமியார் கைது!

    திண்டிவனம்: வசியம் செய்யணுமா, என்கிட்ட வாங்க.. பில்லி, சூனியம் வைக்கணுமா, என்கிட்ட வாங்க.. என்று கூவி கூவி அழைத்து, மக்களை ஏமாற்றிய டுபாக்கூர் சாமியார்.. டேனியல் சித்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திண்டிவனத்தில் திருப்புளிசாமி தெருவில் வசித்து வருபவர் டேனியல் சித்தர். இவர் ஒரு சாமியார் என்று 15 வருஷமாக இந்த ஊருக்குள் சொல்லி கொண்டு திரிந்தவர்.

    நெல்லை பக்கம் உள்ள மூன்றாம்படை பகுதிதான் சாமியாருக்கு சொந்த ஊர். அருள் வாக்கு எல்லாம் இவர் தர மாட்டார். மாந்திரீகம், பில்லி சூனியம், வசியம், இப்படி கோக்குமாக்கு வேலைகளில் மட்டுமே இறங்குவார்.

    வீட்டருகே மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக் கேட்ட சாமியார்.. குத்திக் கொலைவீட்டருகே மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக் கேட்ட சாமியார்.. குத்திக் கொலை

    மனநலம்

    மனநலம்

    இதை சொல்லி பலரிடம் பல லட்சம் ரூபாயையும் பறித்துள்ளார். இவரிடம் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டவர்தான் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர். முருகையன் மகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    முருகேசன்

    முருகேசன்

    அதனால், டேனியல் சித்தர் பற்றி யாரோ சொல்வதை கேட்டு, அவரிடம் சென்று மகளை பற்றி சொல்லி உள்ளார். இதற்கு பிறகுதான் முருகேசனிடம் மெல்ல மெல்ல பணத்தை கறந்தார் டேனியல். உடல்நல குறைபாடு என்று ஆரம்பித்து.. கடைசியில் முருகேசன் வீட்டில் புதையல் இருப்பதாக முருகேசனிடமே சொல்லி அதற்கும் பணத்தை கறந்துள்ளார்.

    செய்வினை

    செய்வினை

    மொத்தம் 12 லட்சம் ரூபாயை இல்லாத புதையலுக்கு தந்துள்ளார் முருகேசன். கடைசியில் மகளும் குணமாகவில்லை, புதையலும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகேசன், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சாமியார், செய்வினை செஞ்சிடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.

    விஏஓ

    விஏஓ

    இதன்பிறகுதான் முருகேசன் போலீசுக்கு சென்று புகார் செய்யவும், போலி சாமியார் டேனியல் சித்தர் கைதாகி உள்ளனர். இப்படி ஒரு சாமியாரை புதையல் இருப்பதாக நம்பி 12 லட்சத்தையும் இழந்துள்ள முருகேசன், ஓய்வுபெற்ற விஏஓ.. என்பதுதான் வேதனை!

    English summary
    Near Thindivanam, fake Samiyar have arrested by police for 12 lakhs Rupees cheating case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X