விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. சாக வச்சுட்டீங்களேடா.. பதற வைத்த விழுப்புரம் தற்கொலை!

தற்கொலைக்கு முன்பு அருண் வீடியோ ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    லாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம்.. விஷம் அருந்தி 5 பேர் தற்கொலை

    விழுப்புரம்: "என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. எவனும் யோக்கியம் கிடையாது.. ஏன்டா என்னை இந்த மாதிரி வாழ்க்கையை வாழ வெச்சிட்டீங்க.. எவனுக்குமே தொல்லை இல்லாம செத்து போகணும்.. இங்க வாழ முடியல.." என்று குடும்பமே தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமாக பேசி அருண் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண்.. இவர் ஒரு நகை செய்யும் தொழிலாளி.. வீட்டிலேயே சொந்தமாக பட்டரை வைத்துக்கொண்டு நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நகை பட்டறையில் 5 பேர் வேலை பார்த்து வந்தனர்.

    மனைவி பெயர் சிவகாமி.. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுபஸ்ரீ, பாரதி என்று 3 பெண் குழந்தைகள்.. இதில் 2 பேருக்கு 5, 3 வயதுதான் ஆகிறது.. கடைசி குழந்தை யுவஸ்ரீ 4 மாதமே ஆன பிஞ்சு!

    லாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம்.. விஷம் அருந்தி 5 பேர் தற்கொலை லாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம்.. விஷம் அருந்தி 5 பேர் தற்கொலை

    3 நம்பர் லாட்டரி

    3 நம்பர் லாட்டரி

    சொந்த வீட்டில், குடும்பத்துடன் அருண் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தார்.. ஆனால் திடீரென நகை தொழில் இவருக்கு நஷ்டம் அடைய ஆரம்பித்தது.. எப்படி அதை சரி செய்வது என்று தெரியாமல் விழித்தார். இதனால் அவர் பல இடங்களில் கடன் வாங்கி தொழில் செய்தார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். அருண்குமாரால் பணத்தை கொடுக்க முடியவில்லை. அதனால் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார்.

    தற்கொலை

    தற்கொலை

    100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் 3 எண்கள் மட்டுமே கொண்ட இந்த லாட்டரி சீட்டுகளில் பல லட்ச ரூபாய் பரிசு விழும் என்று கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதைதான் அருண் நம்பிவிட்டார்.
    மலைபோல நம்பி இந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி கொண்டே இருந்தார்.. கடைசியில் 10 பைசாகூட அருணுக்கு லாட்டரியில் விழவில்லை.. கழுத்தை நெறிக்கும் கடனால் தம்பதி தவித்தனர்.. அதனால் குடும்பத்துடன் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தனர்.. தனது 3 குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தை பாலில் கலந்து கொடுத்தார் அருண்.

    உருக்கம்

    உருக்கம்

    இதற்கு பிறகு ஒரு வீடியோவில் அருண் பேசினார். உருக்கமாக பேசிய வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார். பின்னர், கணவன் - மனைவி மதுவில் சயனைடு கலந்து சாப்பிட்டனர். வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பதறிப்போய் அருண் வீட்டுக்கு ஓடிவந்தனர். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    சடலங்கள்

    சடலங்கள்

    அதனால் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால் மொத்தம் 5 பேருமே சோபாவிலும், தரையிலும் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீடியோ

    வீடியோ

    அருணின் செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 3 நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    நியாயங்கள்

    நியாயங்கள்

    அந்த வீடியோவில் அருண் பேசி இருப்பதாவது: "வாசு.. மனுஷாளுங்க இல்லே நீங்களெல்லாம்.. தெய்வங்கள் அப்பா.. உன்கிட்டதான் நான் நிறைய பாடம் கத்துக்கிட்டேன்.. எனக்கு எதுவும் தெரியாது.. கருமாந்திரம் எழவு புடிச்சவன் நான்.. இங்கே பாரு.. நியாயம், தர்மம் இல்லை. மனுஷாளுங்க கிட்ட நியாயம் இல்லை.. என் புள்ளைங்க 3 பேருக்கும் சயனைடு குடுத்துட்டேன்.. இப்போ நாங்களும் சாப்பிட போறோம்.

    மூச்சு திணறுதுடா

    மூச்சு திணறுதுடா

    இனிமேல் என்னால் ஒன்னுமே பண்ண முடியாது.. ஜாலியா இருங்க. நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க இந்த உலகத்துல. விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்கடா..ப்பா.. 3 நம்பரை ஒழிச்சிடுங்க.. என்னை மாதிரி 10 பேராவது உயிரோட புழைப்பான்.. இங்கே எவனும் யோக்கியம் கிடையாது.. நானும் யோக்கியம் கிடையாது.. என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. ஏன்டா என்னை இந்த மாதிரி வாழ்க்கையை வாழ வெச்சிட்டீங்க.. சரி.. விடு.. நாங்களும் சாகதான் போறோம் கொஞ்ச நேரத்துல.

    சரக்கு

    சரக்கு

    செங்கமே.. தங்கமே.. நல்லா இருங்க.. நியாயமா ஏதாவது செய்யுங்கடா.. என்னை மாதிரி கஷ்டப்படறவங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கடா.. பண்ண மாட்டீங்களா.. பரவாயில்லை.. இதோ 3 பேருமே செத்து போச்சுங்க.. சரக்குலதான் ஊத்தி குடுத்தேன்.. நானும் என் பொண்டாட்டியும் சாப்பிட்டு மொத்தமா எங்க வேலையை முடிக்கிறோம்..

    வீடியோ

    வீடியோ

    ஃப்ரீயா இருக்கோம்.. வாழ்க்கையில யாருக்கும் தொந்தரவு தர மாட்டோம்.. எவனுக்குமே தொல்லை இல்லாம செத்து போகணும்.. இங்க வாழ முடியல.. பட்டறை வேலை செஞ்சு ஒரு மயிரையும் புடுங்க முடியாது.. புரியுதா.." என்று அந்த வீடியோ முடிகிறது. தமிழகம் முழுவதும் இந்த வீடியோவை பார்த்த மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.

    English summary
    family committed sucide due to credit issues and released video villuppuram, this shocking video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X