பச்சை குழந்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொடுமை!
15 நாள் பெண் குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்
Recommended Video
விழுப்புரம்: பச்சபுள்ளையை தன் கையாலேயே கொன்று.. வெள்ளை துணியால் சுத்தி, மண்ணை தோண்டி புதைத்துள்ளார் பெற்ற தகப்பன்! இந்த சம்பவம் விழுப்புர மாவட்டத்தையே கலங்கடித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதி வரதராஜன் - சவுந்தர்யா. சவுந்தர்யாவுக்கு 19 வயதாகிறது.
கல்யாணம் ஆகி 15 மாதங்கள் ஆகிறது. 15 நாளைக்கு முன்பு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்க ஆசையாக ஓடிவந்தார் வரதராஜன். பெண் குழந்தை என்று சொல்லவும், அப்படியே முகத்தை தொங்க போட்டு கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா!
சவுந்தர்யா
இதற்கு பிறகு, சவுந்தர்யா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார். ஆனால், பிறந்த 3 நாள் குழந்தையை வீட்டில் திடீரென காணவில்லை. கடைசியில், வரதராஜன் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தூக்கி கொண்டு தென்பெண்ணை ஆற்றில் புதைக்க போயுள்ளார். ஆனால் இதை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு, வரதராஜனை எச்சரித்து, குழந்தையை கொண்டு வந்து வீட்டில் தந்துவிட்டு போனார்கள்.
அம்மா வீடு
இருந்தாலும் சவுந்தர்யாவுக்கு ஒவ்வொரு நிமிடமும் திக் திக்கென்றே இருந்தது. குழந்தையை திரும்பவும் கணவன் ஏதாவது செய்துவிட போகிறார் என்று பயந்து, அம்மா வீட்டுக்கு கிளம்பி போய்விட்டார். ஆனால் வரதராஜன் பின்னாடியே போய், நாம இனிமே ஒன்னா இருக்கலாம், குழந்தையுடன் சந்தோஷமா இருக்கலாம் என்று டயலாக் பேசி திரும்பவும் வீட்டுக்கே நேற்று காலை கூட்டி வந்துவிட்டார்.
கதறி அழுதார்
ஆனால் நேத்து சாயங்காலம் திரும்பவும் குழந்தையை காணோம். இதனால் சவுந்தர்யா அதிர்ச்சி அடைந்து சொந்தக்காரர்களிடம் கதறி அழுது சொன்னார். அதனால் அனைவரும் சந்தேகப்பட்டு, திரும்பவும் தென்பெண்ணை ஆற்றுப்பக்கம் போனார்கள். அங்கு ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி, புதிதாக மூடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகத்துடன், அங்கு தோண்டி பார்த்த போது, குழந்தையின் மேல் வெள்ளை துணியை சுற்றி புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கைது
இதை கண்டு அதிர்ந்த உறவினர்கள் அவரிடம் விசாரித்தனர், "ஆமாம், நான்தான் உயிருடன் கொன்று புதைத்தேன்" என்று வரதராஜன் சொல்லவும், விஷயம் திருக்கோவிலூர் போலீஸ் வரை சென்று வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் குழந்தை என்பதாலேயே அதனை கொன்று ஆற்றில் மண்ணில் தோண்டி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், ஆத்திரத்தையும் பொதுமக்கள் தரப்பில் ஏற்படுத்தி உள்ளது.