விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்

கணவனை உயிருடன் எரித்து கொன்ற மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கணவனை உயிரோட கொளுத்திய மனைவியின் வாக்குமூலம்- வீடியோ

    திண்டிவனம்: "டெய்லி செக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. என்னை நீ கொளுத்திடுவியான்னு சவால் விட்டார்.. அதான் உயிரோடு எரிச்சிட்டேன்" என்று கணவனை கொன்ற மனைவி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

    திண்டிவனம், தில்லையாடி வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் சேதுபதி. வயசு 24. புதுச்சேரியில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற 19 வயது பெண்ணை காதலித்தார். 20 நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் செய்து கொண்டனர். இதையடுத்து ரெண்டு பேரும் தில்லையாடி வள்ளியம்மை நகர் விரிவாக்கம் பகுதியில் ஒரு கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

    கூச்சல்

    கூச்சல்

    இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சேதுபதி தூங்கி கொண்டிருந்தார். திடீரென கண் விழித்து பார்த்தால், வீடு முழுவதும் பற்றி கொண்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே ஓடிவர கதவை திறந்தால், கதவை யாரோ வெளிப்பக்கமாக பூட்டி இருந்தார்கள். அதனால் எதுவுமே செய்ய முடியாமல் உள்ளிருந்தே கத்தி கூச்சலிட்டார்.

    கதவை உடைத்தனர்

    கதவை உடைத்தனர்

    அவர் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தும் தீயை அணைக்க முடியாமல், தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லவும், அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அப்போது சேதுபதி கருகி பிணமாக விழுந்து கிடந்தார். போலீசார் இது சம்பந்தமான விசாரணை ஆரம்பமானது.

    விசாரணை

    விசாரணை

    சம்பவம் நடந்த சமயம் முருகவேணி வீட்டில் இல்லை, அதுவும் இல்லாமல் வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்ததால் இது கொலைதான் என்ற முடிவுக்கு வந்தது. அதனால் போலீசார் முருகவேணியை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது புருஷனை கொன்றது தான்தான் என்று ஒப்புக் கொண்டார் முருகவேணி. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததை அடுத்து வாக்குமூலம் அளித்துள்ளார் முருகவேணி. அதில் அவர் சொல்லி உள்ளதாவது:

    செக்ஸ் டார்ச்சர்

    செக்ஸ் டார்ச்சர்

    "எங்களுக்கு 2 வாரத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆனது. ஆனால் தினமும் குடிச்சிட்டு வர்றாரு.. வேலைக்கு போகாமல் பகலெல்லாம் செக்ஸ் டார்ச்சரும் தந்தாரு. இதை தவிர என் மேல் சந்தேகமும் அவருக்கு இருந்துட்டே இருந்தது. சம்பவத்தன்றுகூட குடிபோதையில் என்கிட்ட சண்டை போட்டார். அப்போ என்கிட்ட, "நீ என்ன என்னையே தீ வெச்சு கொளுத்திடுவியா" என்று கேட்டு தகராறு செய்தார். போதை தலைக்கேறியதும் போய் தூங்கிவிட்டார்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அப்போதான் நான் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டேன். கூரை மீது மண்ணெண்ணையை ஊற்றினேன். தீயையும் கொளுத்தி கூரை மேல போட்டுட்டு வெளியே போய்ட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு நான் திரும்பி வந்தேன். அப்போ, ஊர் ஜனங்க எல்லாம் அவர் உயிரிழந்துட்டதா என்கிட்ட சொல்லவும், நானும், அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க கதறி அழுவது போல நடித்தேன்" என்றார். இதையடுத்து முருகவேணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர் போலீஸார்!

    English summary
    Wife arrested to killed her husband due to Sex torture and other family issues in Villupuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X