ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது... அமைச்சர் சி.வி. சண்முகம் பாய்ச்சல்
விழுப்புரம்: நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் 25 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக கூறினார்.
முன்னதாக, கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா கொலையை விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என்றும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
DMK president Stalin don't know what is happening in the country minister shanmugam accused.
Story first published: Thursday, January 31, 2019, 8:19 [IST]