திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு… ஜவாஹிருல்லா
விழுப்புரம்: திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது, ஆனால் போதிய இடம் இல்லாததால் ஒதுக்க முடியவில்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதனால், மனித நேய மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை அங்கம் வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.