கூட்டணி பேரமும் பேச தெரியாது.. விருந்து வைக்க தோட்டமும் இல்லை.. பாமகவை கலாய்த்த திருமா
விழுப்புரம்: கூட்டணி பேரமும் பேச தெரியாது. விருந்து வைக்க தோட்டமும் இல்லை என பாமகவை திருமாவளவன் கிண்டல் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து கட்சிகள் வெற்றிக்கான வியூகம் வகுத்து வருகின்றன.
கூட்டணி முடிவடைந்த சந்தோஷத்தில் தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு பாமக சார்பில் தடபுடலாக வெள்ளிக்கிழமை விருந்து வைக்கப்பட்டது.
அங்கம்
இந்த கூட்டணி அமைத்ததில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணிதான் பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. கூட்டணி குறித்த அறிவிப்புகளுக்கு முன்னர் பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
சந்தர்ப்ப வாத கூட்டணி
இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை அவர் விமர்சனம் செய்துள்ளார். இது ஒரு சந்தர்ப்ப வாத கூட்டணி. தனித்து போட்டியிடுவோம் என கூறிவிட்டு அதிமுகவிடம் சரண்டர் ஆகி விட்டனர்.
தொல் திருமா
பணத்துக்கான கூட்டணி என்பதாலேயே ஜெயலலிதா, பாமகவை ஓரங்கட்டினார் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் விழுப்புரத்தில் பழங்குடியினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள்
அவர் பேசுகையில் தங்களுக்கு கூட்டணி பேரம் எல்லாம் பேச தெரியாது. விருந்து கொடுக்க தோட்டமும் இல்லை. பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என கூறும் துணிச்சல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும்தான் உள்ளது என்றார்.