நாலு படத்தில் நடித்த உதயநிதி... ராமதாஸை விமர்சனம் செய்கிறார்.. அன்புமணி காட்டம்
விழுப்புரம்: நாலு படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், 40 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய ராமதாஸை விமர்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எட்டு வழி சாலை குறித்து விவாதிக்க தயாரா என்று அன்புமணி ராமதாஸுக்கு, உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ள நிலையில், இருவரும் மாறி, மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அன்புமணி, திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தியதற்கு காரணமே திமுக தலைவர் ஸ்டாலின் தான் என குற்றம்சாட்டினார்.
தொட்டதுக்கெல்லாம் கோபம் மண்டைக்கு ஏறுதாம் சாருபாலாவுக்கு.. டென்ஷனில் தினகரன்
ஒருமையில் பேசுகிறார் ஸ்டாலின்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் , பாமக நிறுவனர் ராமதாஸ், விஜயகாந்த், மோடி உள்ளிட்ட அனைவரும் விவசாயிகள், விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்றார். ஸ்டாலின் என்னை பற்றியே அதிகம் பேசுகின்றார். திமுக தலைவர் பாமக நிறுவனர் ராமதாஸை ஒருமையில் பேசி வருகின்றார் என்றும் கூறினார்.
மிடுக்கு குறையும்
இந்த தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சரக்கு மிடுக்கு எல்லாம் காணாமல் போகப்போகிறது என்று விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸ், வேட்புமனு பரிசீலனையில், நான் விடுதலை சிறுத்தைகள்கட்சியே இல்லை என்றும், திமுக என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் சொல்வதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு
பெண்களுக்கு பாதுகாப்பான கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணிதான் என்றும், தமிழகம் நல்ல முன்னேற்றம் அடைய மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஸ்டாலின் கொடுக்கு
திமுக தலைவர் ஸ்டாலின் கொடுக்கு என்றால், உதயநிதி நாலு படத்தில் நடித்து விட்டு 40 ஆண்டு காலம் மக்களுக்காக உழைத்த பாமக நிறுவனர் ராமதாசை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்றும் கூறினார். மேலும், நட்சத்திர பேச்சாளர் திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தான் எனவும் தெரிவித்தார்.
பணம் தந்தால் சீட்
திமுகவில் பணம் கொடுத்தால் மட்டுமே சீட்டு தரப்படுவதாகவும், நான்கு சிறுவர்கள் திமுகவினை நடத்தி கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறினார். துரை முருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தியவரே ஸ்டாலின் தான் என்றும் அண்புமணி பேசினார்.