சிவி சண்முகத்தை வீடு தேடிப் போய் சந்தித்த ரவிக்குமார்.. டென்ஷனில் பாமக
Recommended Video
விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிக்குமார் சந்தித்துப் பேசியுள்ளார். இது எதற்காக என்று தெரியவில்லை.
விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுசெயலாளருமான ரவிக்குமார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது. திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிக்குமார்.
இந்நிலையில் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட அமைச்சர் என்ற முறையில், சி.வி.சண்முகத்தை தாம் சந்தித்ததாக ரவிக்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சந்திப்பின் போது திண்டிவனம் பேருந்து நிலையப் பணிகள், நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை, பழங்குடியின மாணவர்களுக்காக ஐ.டி.ஐ, உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
இதைத்தவிர நீங்கள் என்னை சந்திக்க வருவதற்கு சூரியக் கட்சியின் தலைமையிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா என சிரித்துக்கொண்டே சி.வி.சண்முகம் ரவிக்குமாரிடம் கேட்டாராம். அதெல்லாம் இல்லை மக்கள் பணிகளுக்காக தங்களை சந்திப்பதால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் எனக் கூறி ரவிக்குமார் சமாளித்தாராம்.
மேலும், சி.வி.சண்முகம் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவது குறித்தும் ரவிக்குமார் நலம் விசாரித்த்தாக கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக உ.பி.க்கள் சிலர் பொன்முடியிடம் பற்ற வைத்தார்களாம்.
அவரோ 'விடுங்கய்யா பார்த்துக்கலாம், தொகுதி வளர்ச்சி தொடர்பாகத் தானே சந்தித்திருக்கிறார். அதை போய் பெரிதுபடுத்திக்கிட்டு’ எனக் கூறி உ.பிக்கள் வாயை அடைத்தாராம்.
இதை திமுக சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டது. ஆனால் விழுப்புரத்தில் தோல்வி அடைந்த பாமக எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. டாக்டருக்கு இதனால் கோபம் வருமா அல்லது சிவி சண்முகம், அவருடன் பேசி
சமாதானப்படுத்துவாரா என்பது தெரியவில்லை.