அரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்
Recommended Video
விழுப்புரம்: அரசு பள்ளியில் கணிணி வகுப்பறையில் விஜய்யின் நண்பன் படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விழுப்பரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்களின் வசதிக்காக கல்வித்துறை சார்பில் கரும்பலகையுடன் கணிணி திரைகள் (புரஜெக்டர்களும்) அமைக்கப்பட்டுள்ளளது.
நாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்
மாணவர்களுக்கு பயன்
இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசியர்கள் பாடங்கள் தொடர்பான காட்சிகளை இணையதளம் வழியாக கணிணி திரையில் ஒளிபரப்பி கற்பித்து வருகிறார்கள். பாடம் குறித்த சந்தேகங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே சித்தேரிப்பட்டு என்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சனிக்கிழமை அன்று கணிணி வகுப்பறையில் மாணவர்களுக்கு சினிமா காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
நேரில் விசாரணை
இதையடுத்து திருக்கோவிலூர் கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், சனிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணி அளவில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து விஜய் நடித்த நண்பன் படத்தின் திரைப்பட காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
கல்வி அலுவலர் அதிரடி
மேலும் அந்த பள்ளியில் பணிபுரியும் எட்வர்ட் விக்டர்பாபு என்ற இடை நிலை ஆசிரியர் தான் மாணவர்களுக்கு நண்பன் படத்தை ஒளிபரப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் எட்வர்ட் விக்டர்பாபுவை சஸ்பெண்ட் செய்து திருக்கோவிலூர் கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் உத்தரவிட்டார்.