விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: 'கட்சிகள்' பர்சேஸிங்கில் பிரதான வேட்பாளர்கள்
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இப்போது வாக்கு வங்கிகளில் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளை பர்சேஸ் செய்வதில் பிஸியாக இருக்கின்றனராம்.
விக்கிரவாண்டியில் திமுகவும் அதிமுகவும் மோதுகின்றன. நாங்குநேரியில் காங்கிரஸும் அதிமுகவும் களத்தில் உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் வெளியூர் திமுகவினர் முகாம் போடவில்லை.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, வெளியூர் மா.செ.க்களுக்கு போனடித்த திமுக பிரமுகர், தொகுதிக்கு ஆட்களை அனுப்ப வேண்டாம்; செலவுத் தொகை மட்டும் தந்துவிடுங்க என கல்லாப் பெட்டியை திறந்து வைத்தார். இப்போது கல்லா பெட்டி நிரம்பிவிட்டதால் தேர்தல் பணியில் அந்த பிரமுகர் பசியாக இருப்பதாக வெளிப்படுத்தி வருகிறாராம்.
அத்துடன் அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வாக்குகளை கொத்து கொத்தாக அள்ளுவதற்கு பேரம் பேசியிருக்கிறார் அந்த திமுக பிரமுகர். இது அந்த கட்சியின் தலைமைக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்ததாம்.
இதற்கு பதிலடியாக திமுக அணியில் இருக்கும் ஒரு கட்சியை பெருந்தொகை கொடுத்து வளைத்துக் கொண்டிருக்கிறதாம் அதிமுக. இதுதான் விக்கிரவாண்டி தொகுதியின் ஹட் டாபிக்.