வந்தோமா.. சட்டுபுட்டுன்னு சுட்டுட்டு தப்பிச்சோமான்னு இல்லாமல்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிய திருடன்!
திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிவிட்டு சென்றுள்ளார் ஒரு திருடன்
Recommended Video
விழுப்புரம்: வந்தோமா.. சட்டுபுட்டுன்னு திருடிட்டு தப்பிச்சு ஓடினோமான்னு இல்லாமல்.. திருட வந்த இடத்தில்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிட்டு விட்டு போயுள்ளார் ஒரு திருடன்!
விழுப்புரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் உள்ளது சுதாகர் நகர். இங்கு அடிக்கடி வீட்டிலுள்ள பொருட்கள் காணாமல் போயுள்ளது.
இத்துடன் பெட்ரோலையும் யாரோ களவாடிட்டு போயிடுறாங்களாம். இதனால் அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் தந்திருந்தனர். இது சம்பந்தமாக போலீசாரும் ஆட்டைய போடுவது யார் என்று தேடி வந்தனர்.
அப்படின்னா.. இது திமுகவுக்கு வச்ச குறியா.. வைகோ, திருமா நிலை என்னாகும்.. பரபரக்கும் சின்ன பிரச்சினை!
சிசிடிவி காமிரா
இருந்தாலும் அதே பகுதியில் வசித்து வந்த இளங்கோ என்னும் ஆசிரியர், திருடனை கண்டுபிடிக்க தன் வீட்டை சுற்றிலும் மொத்தம் 6 இடங்களில் சிசிடிவி காமிராவை பொருத்தினார். இந்த சமயத்தில், இளங்கோவின் பக்கத்து வீட்டில் பெட்ரோல் திருடு போயுள்ளது. இதனால் உடனே தன் வீட்டு சிசிடிவி காமிராவை ஆன் செய்து பார்த்தார் இளங்கோ.
பெட்ரோல்
அப்போதுதான் திருடனை பார்த்து இளங்கோ ஷாக் ஆகிவிட்டார். திருடன் உள்ளே டார்ச் லைட்டுடன் நுழைகிறார். வந்தஉடனேயே பெட்ரோலை திருடிவிடுகிறார். அதற்கு பிறகு, வேறு ஏதேனும் திருட தேறுமா என்று சுற்றிலும் ஒரு லுக் விடுகிறார். ஒன்னும் கிடைக்கவில்லை. அப்போது ஒரு ஊஞ்சல் அங்கு இருப்பதை கண்டதும், அதில் ஏறி உட்கார்ந்து கொள்கிறார் திருடன்.
சிசிடிவி காட்சி
முகத்தில் ஒரு டென்ஷன் இல்லை.. திருட வந்திருக்கிறோமே என்ற உறுத்தலும் இல்லை.. ஜாலியாக அந்த ஊஞ்சலில் ஒரு ரவுண்டு சுற்றுகிறார். பிறகு சாவகாசமாக எழுந்து கிளம்பி செல்கிறார். இந்த காட்சியை கண்டதும், போலீசாரே அரண்டு விட்டனர்.
கோரிக்கை
இந்த திருடனை எப்படியாவது பிடியுங்கள் என்று அந்த பகுதி மக்களும் கோரிக்கையை வைத்துள்ளனர். திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய இந்த சம்பவம்தான் விழுப்புரம் ஹாட் டாக்-காக உள்ளது.