விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொண்ணுக்கு வயசு 15 தான்.. பையனுக்கு 17.. கொஞ்ச நாள்தான்.. அதற்குள் நடந்த கொடுமை!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைதானான்

Google Oneindia Tamil News

விருதுநகர்: பொண்ணுக்கு வயசு 15தான் ஆகிறது.. பையனுக்கு வயசு 17தான் ஆகிறது.. கொஞ்சம் நாள்தான் பழகினாங்க.. அதுக்குள் அந்த சிறுமியை கர்ப்பமாகிவிட்ட கொடுமை நடந்துள்ளது.

விருதுநகர் பி.குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர்தான் அந்த சிறுமி.. அதேபோல, கருப்பசாமி நகரை சேர்ந்தவர் அந்த சிறுவன்.. எதேச்சையாக சந்தித்து கொண்டனர்.. எதேச்சையாக லவ் வந்துவிட்டது.. எதேச்சையாக பழகியும் விட்டனர். எல்லாமே சில மாதங்களில் நடந்து முடிந்துவிட்டது.

17 year old minor boy arrested under posco near virudhunagar

இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிடவும், மகளை கண்டித்தனர்.. அட்வைஸ் செய்தனர்.. இந்த சமயத்தில்தான், பெண்ணை அந்த 17 வயது சிறுவன் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

17 வயசில் பெண்ணை கடத்தினார் என்பதைவிட, விருதுநகர் கட்டையாபுரத்தில் ஒரு வீடு எடுத்து குடும்பமே நடத்தி வந்துள்ளார் என்பதுதான் அடுத்த ஷாக்! பிறகு வேலை தேடி வருவதாக சொல்லிவிட்டு, சிறுமியை வீட்டிலேயே தனியாக விட்டுவிட்டு, திருப்பூருக்கு வந்துள்ளான் சிறுவன்.

இந்த சமயத்தில்தான் அந்த பெண் கர்ப்பமாகிவிட்டார்.. திருப்பூருக்கு சென்ற சிறுவனை காணோம்.. பலமாசம் ஆகியும் ஊருக்கு திரும்பி வரவும் இல்லை.. போனிலும் பேசவில்லை... இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி திருப்பூருக்கே கிளம்பி சென்றுள்ளார்.. அங்கு சிறுவனையும் தேடி கண்டுபிடித்துவிட்டார்.. தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன், கெட்ட கெட்ட வார்த்தையில் சிறுமியை திட்ட ஆரம்பித்துவிட்டாராம்.. அத்துடன் கர்ப்பமான ஒரு பெண்ணை தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்றும் மறுத்து சண்டை போட்டுள்ளதாகவும் தெரிகிறது..

தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை! தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!

இதனால் வேறு வழியின்றி கண்ணீருடன் விருதுநகர் மகளிர் போலீசுக்கு சென்ற சிறுமி, சிறுவன் மீது புகாரும் தந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்... சிறுமியை கடத்தி சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றவர்கள் அளவுக்கு அதிகமாக செல்லம் தந்து வளர்த்தும், அறிவுரைகளை வழங்கியும், அது எதையுமே காதில் வாங்காமல், லவ் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறும் பெண் பிள்ளைகள் படும் துயரம் நீண்டு கொண்டே செல்வது வருத்தமாக உள்ளது!

English summary
17 year old minor boy arrested under posco near virudhunagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X