பாஜக தலைவரின் தம்பி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.. அருகில் தலையில்லாமல் கிடந்த மிளா
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேயனாற்று ஓடையில் பாஜக நகர தலைவர் தம்பி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் அருகே மிளா தலை இல்லாமல் கிடந்ததால் வேட்டையாடும் போது இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகதோப்பு பேயனாற்று ஓடையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 35 மதிக்கதக்க ஆண் சடலமும் சடலம் அருகிலேயே தலை இல்லாமல் பெரிய மிளாவும் (மான்) கிடந்தது.
பின்னர் சடலத்தை கைப்பற்றி சடலத்தின் சட்டை பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜக நகர தலைவரின் தம்பி கணேசன் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
மேலும் சடலத்தின் தலையில் டார்ச் லைட் கட்டி இருந்ததாலும், சடலம் அருகே மிளா இருந்ததாலும் வேட்டையாடும் போது உயிரிழந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா என்ற கோணத்தில் மம்சாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.