நிச்சயதார்த்த பெண்ணுக்கு கொரோனா.. கிலியில் 50 பேர்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விருதுநகரில் ஷாக்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள விதை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் 25 வயது பெண் பணியாற்றி வருகிறார். இவர் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் இதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோவில் பட்டியைச் சேர்ந்தவருக்கு 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மற்றும் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் விதை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் பணிபுரிந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சுகதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அந்த பெண்ணை அழைத்து செல்வதற்காக வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.
ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோரையும் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அத்துடன் அந்த பெண் வசித்து வந்த பாண்டியன் நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.