வீட்டிலிருந்து வெளியே வந்த நில புரோக்கர்.. இழுத்துப் போட்டு வெட்டித் தள்ளிய கும்பல்!
Recommended Video
விருதுநகர்: விருதுநகரில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பழிக்குப் பழியாக இந்த கொடூர படுகொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இவரது மனைவி வசந்தி. விருதுநகர் அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் அலுவலக எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
தகவலறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துகுறித்து போலீசார் கூறுகையில் அல்லம் பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.