எஸ்டேட் பொண்ணுதான் வேணும்.. அதான் மனைவியை வெட்டி சுடுகாட்டில் வீசிட்டேன்.. பதற வைத்த குணசேகரன்
மனைவியை வெட்டி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
விருதுநகர்: "எஸ்டேட் பெண்தான் எனக்கு வேணும்.. ஆனா ஜாலியா இருக்க விடாம, என் மனைவி தகராறு செய்து கொண்டே இருந்தாள்.. அதனால்தான் வெட்டி கொன்னு.. சுடுகாட்டில் போட்டுவிட்டேன்" என்று மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.
ராஜபாளையம் சங்கர பாண்டியாபுரம் பகுதியில் ஒரு சுடுகாடு உள்ளது.. இங்கு மயானத்தில் கடந்த 7-ந் தேதி ஒரு பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.. மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார்.
அவரது கழுத்தில் அரிவாள் வெட்டு இருந்தது.. அதனால் பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு, இங்கு வந்து கொலையாளிகள் போட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில் வடக்கு போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
விசாரணை
அந்தப் பெண் கழுத்தில் தாலி கிடந்ததால், கல்யாணமானவர் என்று கருதிய வடக்கு போலீசார் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணையை ஆரம்பித்தனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.. விசாரணையில், இறந்தவர் சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த பழனியம்மாள், வயது 29 என்று தெரியவந்தது... இவரது கணவர் குணசேகரன், ஆனால் அவரை அங்கு காணோம் என்பதால், மொத்த சந்தேகமும் இவர் மீது திரும்பியது.
குடித்தனம்
கேரள மாநிலம் மூணாறு எஸ்டேட்டில்தான் குணசேகரன் வேலை பார்த்து வந்துள்ளார்.. அந்த எஸ்டேட்டில் ஒரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. அங்கேயே குடித்தனமும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.. இந்த விஷயம் ஊரில் இருக்கும் பழனியம்மாளுக்கு மெதுவாகத்தான் தெரியவந்தது.. கணவனை கண்டித்தார்.. கெஞ்சி பார்த்தார்.. ஆனால் இருவருக்கும் தகராறுதான் வெடித்தது.
பழனியம்மாள்
சம்பவத்தன்று குணசேகரன் ஊருக்கு வந்துள்ளார்.. மாமியார் வீட்டில் இருந்த பழனியம்மாளுடன் தகராறு செய்துள்ளார். அதன்பிறகு இருவரும் வெளியே சென்றார்களாம்.. ஆனால் இருவருமே வீடு திரும்ப காணோம்.. இந்த நிலையில்தான், பழனியம்மாள் சுடுகாட்டில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, தனிப் படையினர் மூணாறு சென்று பார்த்தால், அங்கும் குணசேகரன் இல்லை.
சுடுகாடு
தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு, கொல்லத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் குணசேகரன் வேலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.. அங்கு விரைந்து சென்ற போலீசார் குணசேகரனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. "எஸ்டேட்டில் வேலை செய்யும் பெண்ணை என்னால் விடமுடியவில்லை.. என் கள்ள உறவை மனைவி கண்டித்து கொண்டே இருந்தார்.. அதனால்தான் பழனியம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.. உடலை உடலை சுடுகாட்டில் உள்ள முட்புதரில் வீசிவிட்டேன்" என்றார்.