விருதுநகரில் பயங்கரம்.. வீட்டு வாசல்படியில் குடித்ததை தட்டி கேட்ட மதிமுக பிரமுகர் படுகொலை
விருதுநகர்: விருதுநகர் அருகே மதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). மதிமுக பிரமுகரான இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வந்தார்.
மதிமுக கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். இவர் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த அய்யலுசாமியின் மகன் மாரிமுத்து(20) என்பவர் அடிக்கடி இரவு வேளையில் மது குடித்து வந்துள்ளார்.
இதனை சிவக்குமார் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சிவக்குமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளார். அதைப் பார்த்த சிவகுமார் மாரிமுத்துவை வழக்கம் போல் கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
சேலத்தில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. 4ஆவது மாடியிலிருந்து குதித்து இருகுழந்தைகளின் தாய் தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிவக்குமாரை பின்புறமாக அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ.இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய மாரிமுத்து மீது சாத்தூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.