கட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு!
Recommended Video
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் கும்பலைக் கலைக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூலாங்கல் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
மதுரை அருகே வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும்பொழுது பரளச்சி பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால் இரண்டு சமூகத்திற்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கிருந்த வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. பின்பு அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விருதுநகர் எஸ் பி பெருமாள், மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பரளச்சி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.