காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்
Recommended Video
அருப்புக்கோட்டை: காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது சவாரி செய்தே தேர்தலை சந்தித்து வருகின்றனர். ஒருவேளை அக்கட்சி தனித்து போட்டியிட்டால் எங்களைவிட வாக்குகள் குறைவாகவே பெறும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக 7 தமிழர்கள் தண்டனை பெற்று வருகின்றனர்.
அவர்களை விடுவிக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்திடவில்லை.
காரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்
சீமான் சந்திப்பு
இந்த நிலையில் 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கியுள்ளார். அவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.
காலம் தாழ்த்துவது
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரவிச்சந்திரன் 28 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். 7 பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கையை நிராகரிக்காமலும் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்வது போல் உள்ளது.
காங்கிரஸ்
7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் மட்டுமே போட்டி போட முடியும் என காங்கிரஸ் எம்பி தெரிவித்திருந்தார்.
வாக்குகள்
நாங்கள் தனித்து தேர்தலில் நின்று 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்துள்ளனர். தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட அவர்கள் குறைவாகவே பெறுவர் என தெரிவித்துள்ளார்.