பார்ரா.. புவிசார் குறியீடு வந்த வேகத்தில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை விர்ர்ர்!
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: புவி சார் குறியீடு வாங்கிய அதே வேகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலையை ஏற்றி விட்டார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஸ்ரீ ஆண்டாள் கோவில். அதற்கு அடுத்தபடியாக நம் நினைவில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. அந்த அளவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரபலமானது.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அடையாளம் பால்கோவா. ஒரு காலத்தில் இங்கு உள்ள பகுதிகளில் பால் அதிகமாக கிடைப்பதால் தங்களுக்கு தேவையான பாலை பயன்படுத்திவிட்டு மற்றதை உணவாக மாற்றி விற்பனை செய்யும் வழக்கம் 50 வருடங்களுக்கு முன்பு இருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த பால்கோவா உருவானது. தற்போது இங்கு தயாரிக்கப்படும் பால் கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது இதன் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாலும் , பால் விலை உயர்வாலும் தனியார் மற்றும் கூட்டுறவில் தயாரிக்கப்படும் பால்கோவா கிலோவிற்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. கிலோ 240 ரூபாய் விற்கப்பட்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தற்போது 260 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
பாத்து செய்யுங்க முதலாளிமார்களே.. மக்களுக்கு பால்கோவா எப்போதும் இனிப்பாக இருக்க வேண்டும்.. விலை ரொம்ப ஏறிடாம பார்த்துக்கங்க.