தென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Recommended Video
ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி மாதம் 4 ஆம் நாள் நாளில், முதல் சனிக்கிழமை என்பதனால் அதிகாலை சீனிவாச பெருமளுக்கு 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று. அதை தொடர்ந்து அதிகாலை 5.30 காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள் தானிய பொருள்கள் போன்றவற்றை கருணை கண்களுடன் இருக்கும் சீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக வழங்குவார்கள். இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், அன்னதான உணவு வசதிகள், கழிப்பிட வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துகளை தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் தயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலம் அனைத்து வசதிகளும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.