மழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: மழைக்காலம் வந்து விட்டது. தமிழகம் எங்கும் மக்கள் மழையை வரவேற்கவும், பெருமழைக் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் மும்முரமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாப்பது என்பது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது மழை வெள்ளத்தில் மாற்றியவர்கள் எந்த மாதிரி மீட்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு அது குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .
இதேபோல தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சிகளை தீயணைப்புத் துறை எடுத்து வருகிறதாம்.