அப்போ டாடி.. இப்போ ஸ்டண்ட் மாஸ்டர் மோடி… ராஜேந்திர பாலாஜி புதுபட்டம்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரதமர் மோடியை டாடி என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோடி என புது பட்டம் வழங்கி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசியதாவது: இந்தியாவை பாதுகாக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மோடி என்றும் இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் அதை மல்லுக்கட்டி தடுக்கக்கூடிய மனிதர் மோடி என்றார்.
டிடிவி தினகரனுக்கு பொது சின்னம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் குடும்பத்தினரே அவரை மதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அதிமுகவை யாரிடமும் அடகு வைக்க வில்லை என்றும் அதிமுகவை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளோம் எனவும் கூறினார்.
என் கிட்ட ஜாதி இருக்கு.. உன் கிட்ட பணம் இருக்கு.. டீல் பேசிக்கலாமா.. கல்லா கட்டும் சிறு கட்சிகள்
மேலும், தமிழகத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.