ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு!
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் கொரோனாவால் தியேட்டர்களில் வெளியாகவில்லை. ஓடிடியில் வெளியானது.
இந்த படத்தை விருமாண்டி இயக்கினார். ஊரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் துபாயில் வேலைக்கு சென்ற விஜய் சேதுபதி அங்கு இறந்துவிடுகிறார்.
சுனாமிக்கு முன் நடந்த அதே சம்பவம்.. கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்..பரபரப்பு
அவரது உடலை மீட்க போராடும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜபாளையத்தில் உள்ளூர் கேபிளில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குநர் விருமாண்டி அளித்த புகாரின் பேரில் கேபிள் டிவி உரிமையாளர் திருப்பதியை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.