கொரோனாவால் பலி.. கணவரை அடக்கம் செய்த கையோடு.. மனைவி தூக்கிட்டு தற்கொலை.. விருதுநகர் சோகம்!
விருதுநகர்: கணவரை அடக்கம் செய்த உடனேயே வீட்டுக்கு வந்து மனைவி தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. வைரஸ் பாதித்து கணவர் இறந்த சோகம் தாங்காமல், அழுதுகொண்டே இருந்தவர், திடீரென தற்கொலை செய்து கொண்டது விருதுநகரில் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.
விருதுநகரில் வசித்து வருபவர் பிரபாகர்.. ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார்.. மனைவி பெயர் ராமபிரபாவதி.. ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக இருந்தவர்.. 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 24-ம் தேதி பிரபாகருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.. அதில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததும் உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
3 நாட்கள் தீவிரமான சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிர் பிரிந்துவிட்டது.. இதையடுத்து அவரது சடலத்தை சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு வந்து, நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
கொரோனா அப்டேட்: இந்தியாவில் 5,28,859 பேரை பற்றிய கொரோனா - 16,095 பேர் மரணம்
பிரபாகருக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், 2 மகள்களுக்கும் டெஸ்ட் செய்ய உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்றனர்.. தன் அம்மாவையும் தங்களுடன் டெஸ்ட் எடுக்க வருமாறு அழைத்தனர்.. ஆனால், ராமபிரபாவதி மறுத்துவிட்டார்.. அடக்கம் செய்துவிட்டு வந்ததில் இருந்து கணவரை நினைத்து அழுது கொண்டே இருந்தார்.
இதனால் அவரை சமாதானப்படுத்த முடியாமல், மகள்கள் இருவரும் அழுதுகொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமபிரபாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவலறிந்து வந்த விருதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்..
கணவன் இறந்து ஒரே நாளில் மனைவியும் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... 2 மகள்களும் தற்போது தாய்-தகப்பன் இன்றி கலங்கி நிற்கின்றனர்.