எப்ப பார்த்தாலும் "அது"க்காக தொந்தரவு.. கொன்னுட்டேன்.. பரபரபக்கும் அருப்புக்கோட்டை!
அருப்புக்கோட்டை.. கணவனை எரித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
Recommended Video
விருதுநகர்: எப்ப பார்த்தாலும் "அது"க்கு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருந்தார்... பொறுக்க முடியல... அதான் ஒரேடியா கொன்னுட்டேன் என்று மனைவி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமம் மாந்தோப்பு. இங்கு வசித்து வந்தவர்தான் வீரபத்திரன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், இன்று காலை வீரபத்திரன் தனது தோட்டத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.
முதலில் மகாலட்சுமியிடம்தான் விசாரணை தொடங்கியது. ஆரம்பிக்கும்போதே முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அதனால் விசாரணை தீவிரமானது. பிறகு எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் போலீசாரிடம் சொல்லிவிட்டார் மகாலட்சுமி.
அதாவது, "என் புருஷன் என்னை அடிக்கடி உறவுக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பார். ரொம்ப தொல்லை பண்ணவும் பொறுக்க முடியாத நான் கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மண்ணெண்ணெய் ஊற்றி எரிச்சி கொன்னுட்டேன்" என்றார். இதையடுத்து மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.