பிரேசிலில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு.. கட்டுக்கடங்காத தொற்று!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.07 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 5.18 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,057 ஆகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,18,046 ஆகும்.
கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59 லட்சமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 43 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 57,968 பேர் அபாய கட்டத்தில் உள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,78,165 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1.30 லட்சமானது. அது போல் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,53,369 ஆனது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரமாகும்.
மோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி
ரஷ்யாவில் 6.54 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலி எண்ணிக்கை 9,536 ஆகும். இந்தியாவில் 6.05 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 17,848 ஆகும். பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,13,483 ஆகும். இங்கு 43,906 பேர் பலியாகிவிட்டனர்.