கொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10.11 லட்சமாக உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.5 கோடி
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.38 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1011 லட்சமானது. கொரோனாவிலிருந்து இதுவரை 2.51 கோடி பேர் மீண்டுள்ளனர். 65,599 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 லட்சமாகும். இதுவரை 2.10 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 44,036 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று
இந்தியாவில் 62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 97,529 பேர் பலியாகிவிட்டனர். ஒரே நாளில் 80,500 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
பிரேசிலில் 47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.43 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்த நாடுகளில் உலகளவில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில் தற்போது 3ஆவது இடத்திற்கு வந்துள்ளது.