அமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. 5 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகிவிட்டனர்.
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ளது விர்ஜீனியா மாகாணம். இங்கு பீச் பகுதி என்பது பிரபலமானது. அங்குள்ள அரசு ஊழியர்களுக்கான கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.
அப்போது திடீரென அங்கிருந்தோரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டை அந்த நபர் எதற்காக நடத்தினார் என்பது தெரியவில்லை.
துப்பாக்கியால் சுட்டவர் டிவெய்ன் கிரேட்டாக் என கூறப்படுகிறது. 40 வயதான இவர் அங்குள்ள அரசு அலுவலகத்தில் பொறியாளராக வேலைபார்த்தவர் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளால் சாலை திட்டங்கள் குறித்த செய்தி குறிப்புகளை வெளியிடுவதுதான் இவரது பணி.
அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடப்பது வாடிக்கையாகியுள்ளது. அங்குள்ள மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.