இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று!
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் இதுவரை 3.12 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9.64 லட்சமாகும்.
உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் மேலும் 5,516 பேர் கொரோனாவால் பாதிப்பு.. கொங்கு மண்டலத்தில் கிடுகிடுக்கும் தொற்று!
ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9.64 லட்சமாகும். கொரோனாவிலிருந்து இதுவரை 2.28 கோடி பேர் மீண்டுள்ளனர். 61,461 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சமாகும். இதுவரை 2.04 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,265 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 54 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 87,909 பேர் பலியாகிவிட்டனர். ஒரே நாளில் 87,382 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
பிரேசிலில் 45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.36 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 16,282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்த நாடுகளில் உலகளவில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில் தற்போது 3ஆவது இடத்திற்கு வந்துள்ளது.