கொரோனா.. உலகளவில் 5,788,312 பேர் பாதிப்பு.. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன்: இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனாவால் 5,788,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பிரச்சினை உலகம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை, இந்த பாதிப்பால், 357,406 பேர் பலியாகியுள்ளனர். 2,497,153 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,745,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பிரேசில் 414,661, ரஷ்யா 370,680, ஸ்பெயின் 283,849, பிரிட்டன் 267,240, இத்தாலி 231,139, பிரான்ஸ் 182,913, ஜெர்மனி 181,895, துருக்கி 159,797, இந்தியா 158,086, ஈரான் 141,591 பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 102,107 பேர் கொரோனா காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இது 37,460 என்ற அளவில் உள்ளது. ஈரானில் 7,564 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 4,534 பேர் இந்த நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0
சிங்கப்பூரில் 32,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 23 பேர் பலியாகியுள்ளனர்.