கனமழை.. லைவ் ரிலேயில் உடைந்த பாலம்.. செய்தியாளர் கண் முன்னே நடந்த திகில் சம்பவம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மழை குறித்த செய்தியை செய்தியாளர் ஒருவர் நேரலை செய்து கொண்டிருந்த போது அவர் கண் முன் பாலம் ஒன்று உடைந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. எங்குப் பார்த்தாலும் மழை வெள்ளம் சூழந்துள்ளது. இதுகுறித்து செய்தியை ஒளிபரப்பு செய்ய பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அலெக்சாண்டர் கவுண்டி என்ற பகுதியில் பாலத்தின் அடியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சிகளை நேரலை செய்தார். அச்சமயம் அவருக்கு திகில் சம்பவம் நடந்தது.
அதாவது பாலத்தின் மீது அவர் மழை நிலவரம் குறித்து விவரித்த போது அதன் மற்றொரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. எனினும் அந்ச செய்தியாளர் சிறிது கூட அசராமல் அவருக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்தார்.
Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை!
அவருக்கு அந்த சேனலின் பணியாளர்களும் நேயர்களும் சமூகவலைதளவாசிகளும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.