கலிபோர்னியாவில் காட்டுத்தீ.. நூலகத்தையும் புத்தகங்களையும் தீயிலிருந்து காத்த ஆட்டு மந்தை
வாஷிங்டன்: அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுத்தீயில் இருந்து நூலகத்தை 500 ஆடுகள் காப்பாற்றிய சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த தீயானது மலைச்சரிவில் உள்ள பகுதிகளுக்கும் பரவியது.
அந்த பகுதியில் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் பெயரில் உள்ள நூலகம் உள்ளது. நூலகத்தை சுற்றிலும் தீப்பிடிக்கக் கூடிய புற்கள் இருந்தன. இந்த காட்டுத்தீ அங்கும் இங்கும் பரவி, நூலகத்தின் அருகே வந்தது.
அப்போது அங்கிருந்த மக்கள் புத்திசாதுர்யமாக செயல்பட்டு 500 ஆடுகளை அனுப்பி புற்களை மேய வைத்தனர். இதனால் காட்டுத் தீ பரவியபோது நூலகமும் அதன் புத்தகங்களும் காப்பாற்றப்பட்டன.
சுமார் 13 ஏக்கர் நிலத்தை ஆடுகள் மேய்ந்து அப்பகுதியை தீவிபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளன.
திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி