உறவினர்கள் 3 பேரை கொலை செய்து, அதில் ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 கொலைகளை செய்த ஒருவர் அதில் ஒருவரின் இதயத்தை தனியே எடுத்து சமைத்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதில் 2 பேரை கொலை செய்வதற்கு முன்பு அவர்களுக்கும் சமைத்த இதயத்தை சாப்பிட கொடுத்துள்ளார் இந்த கொடூர கொலைகாரன்.
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2017 ஆம் ஆண்டில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் பக்கத்து வீட்டில் உள்ள தனது உறவினரை அடித்துக் கொலை செய்தார். பின்னர் வெறி அடங்காத பால் ஆண்டர்சன், அவரது உடலில் இருந்து இதயத்தை தனியே எடுத்தார். பின்னர் தனது மாமா வீட்டுக்கு சென்ற அவர் அங்கு உருளைக்கிழங்குடன் கொலை செய்யப்பட்டவரின் இதயத்தை சமைத்து மாமாவுக்கும், அவரது மனைவிக்கும் கொடுத்துள்ளார்.அவரும் சாப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது மாமாவையும், அவரது நான்கு வயது பேத்தியையும் பால் ஆண்டர்சன் கொடுரமாக கொலை செய்தார். அவரது மனைவியை அவர் கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த கொடூர கொலை சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் செய்த செயல்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் பால் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.