அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.. தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு "தலைவலி"
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5.98 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. அதாவது 5,98,450 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 84 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 59 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்காவில் 37 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 71,580 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.41 லட்சமாக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 33 ஆயிரம் பேர் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 77,932 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. இங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 34,820 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 26,285 பேர் பலியாகிவிட்டனர். ரஷ்யாவில் 7.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 79 பேர் பலி- 4,538 பேருக்கு தொற்று பாதிப்பு
பெருவில் 3.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 3.37 லட்சம் பேருக்கும், சிலியில் 3.26 லட்சம் பேரும், மெக்சிகோவில் 3.24 லட்சம் பேரும், ஸ்பெயினில் 3.07 லட்சம் பேரும், பிரிட்டனில் 2.93 லட்சம் பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.