பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமி லஷ்கர் இ தொய்பா.. அமெரிக்கா
Recommended Video
வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமிதான் லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கம் என அமெரிக்கா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பாதுகாப்பு நிபுணரும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியையுமான கிறிஸ்டினி ஃபேர் ஹட்சனில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு பினாமியாக லஷ்கர் இ தொய்பா உள்ளது. லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் வஷ்கர் இ தொய்பா அமைப்பின் பங்கு அதிகம் உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த நாசவேலைகள் நடந்துள்ளன.
அந்த இரண்டு பேர் யார்? அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு பாரபட்சமானது என்றார்.
இவர் அன்டர்ஸ்டான்டிங் லஷ்கர் இ தொய்பா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ளது.