Breaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது!
Recommended Video
வாஷிங்டன்: சந்திரயான் 2 விண்கலத்தால் கொண்டு செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலை என்னவென தெரியாமலும் அதனிடம் இருந்து சிக்னலை பெற முடியாமலும் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் கடந்த 7-ஆம் தேதி தரையிறங்கியது. ஆனால் 400 மீட்டர் உயரத்தில் அந்த கருவி தரையிறங்கும்போது இஸ்ரோவிடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் மனவேதனை அடைந்தனர்.
நிலவில் 14 நாட்கள் சூரிய ஒளிப்படும், மற்ற 14 நாட்கள் இருள் சூழும் என்பதால் சூரிய ஒளியின் போதே விக்ரம் லேண்டர் குறித்த தகவல்களை பெற முயற்சித்து வருகின்றனர். இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இஸ்ரோவுடன் நாசாவும் கைகோர்த்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்ப நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேன்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேல் வலம் வந்து அதை புகைப்படம் எடுக்கவுள்ளது. அப்பகுதியில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் தெளிவான படம் கிடைப்பது சிரமம் என்கிறார்கள். இருப்பினும் நாசாவின் ஆர்பிட்டர் ஏதாவது நல்ல செய்தியைத் தராதா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.