படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ்.. வெளியானது பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை
வாஷிங்டன்: போலீஸாரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருந்தது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
இதுதொடர்பாக 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த மே 25-ஆம் தேதி சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு.
இவரை சாலையில் குப்புற படுக்க வைத்த போலீஸ் அதிகாரி பிளாய்டின் பின்னங்கழுத்தில் முட்டியால் வைத்து நெரித்தே படுகொலை செய்தார். இதையடுத்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
தாங்க முடியவில்லை.. ஜார்ஜ் "கொலையால்" பொங்கி எழுந்த ஒபாமா.. டிரம்ப் எதிர்பார்க்காத திருப்பம்!
ஜார்ஜ்
ஹென்னபின் கவுண்டியின் மருத்துவ அதிகாரியால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பிளாய்டிற்கு அடிப்படையிலேயே உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் போதை பொருளை பயன்படுத்தியதாகவும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கழுத்தை நெரித்ததால்தான் அவர் இறந்தார் என்பதற்கு எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜ் குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.
இனப்படுகொலை
அதில் அவரது கழுத்து மற்றும் பின்கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாய்டின் கழுத்தில் அந்த அதிகாரி கால் வைத்து நெரித்ததால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டது. இதனால் இதயம் செயலிழந்து அவர் இறந்துவிட்டார். இது ஒரு இனப்படுகொலை என அறிக்கை வெளியானது.
ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா
இந்த நிலையில் ஜார்ஜின் குடும்பத்தினரின் அனுமதியுடன் ஹென்னபின் கவுண்டியின் மருத்துவ அதிகாரி மேற்கொண்ட பிரேத பரிசோதனை குறித்த முழு அறிக்கை தற்போது வெளியானது. அதில் ஏப்ரல் 3-ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் அவருக்கு எந்தவித அறிகுறியும் இருந்திருக்கவில்லை.
ஆரோக்கியம்
அவரது நுரையீரல்கள் ஆரோக்கியமாக இருந்துள்ளன. ஆனால் அவரது இதயத்தின் தமனிகளில் சில குறுகலாக இருந்துள்ளன என்று 20 பக்கங்களை கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுப்பட்டுள்ளது. இதனிடையே ஜார்ஜை கொன்ற அதிகாரி மீது 3ஆவது டிகிரி கொலை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதை 2ஆவது டிகிரி கொலை வழக்காக மாற்றப்பட்டதோடு அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற 3 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.