அமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி
வாஷிங்டன்: உலகில் நேற்று ஒரு நாளில் மட்டும் 486,006 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 134,237 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 44,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றால் 5,89,67,519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 13,93,193 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,07,56,269 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது நோய் பாதிப்புடன் 1,68,18,057 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால 1,25,86,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 91,40,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 6,071,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே நேற்று ஒரு நாளில் மட்டும் 486,006 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 134,237 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 44,404 பேருக்கும், இத்தாலியில் 24 மணி நேரத்தில் 28,337 பேருக்கும், ரஷ்யாவில் 24,581 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளத.
உலகில் நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் 7375 பேர் மரணம் அடைந்தனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 864 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 562 பேரும், மெக்ஸிகோவில் 550 பேரும், இந்தியாவில் 510 பேரும் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,655 பேருக்கு தொற்று.. 2,010 பேர் டிஸ்சார்ஜ்.. 19 பேர் உயிரிழப்பு..!
இதுவரை கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 262,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 169,197 பேரும், இந்தியாவில் 133,773 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.