கொரோனா: டொனால்ட் டிரம்ப் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
வாஷிங்டன்: கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
டிரம்ப்பின் உதவியாளர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் டிரம்ப், மெலானியா இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானதால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால் டிரம்ப்-க்கு காய்ச்சல் நீடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி
டிரம்ப்-ன் மருத்துவ குழு வெளியிட்ட அறிக்கையில், தற்போது காய்ச்சல் எதுவும் இல்லாமல் டிரம்ப் உடல்நிலை சீராக உள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகள் எடுத்திருக்கிறார். அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குகின்றன. இதனிடையே திங்கள்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து டிரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது.