இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் ஆபத்தான சூழல்.. கவலை கொள்ளும் டிரம்ப்
Recommended Video
வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் ஆபத்தான சூழல் நிலவுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தால் இந்தியா , பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் உள்ளது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளும் கிளம்பியுள்ளன.
சூழல்
இந்தியா- பாகிஸ்தான் சம்பவம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள சூழல் மிகவும் மோசமானது, ஆபத்தானதும் கூட.
அமைதி
தீவிரவாத தாக்குதலால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். எனவே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.
சிக்கலான விஷயம்
அதில் நாங்கள் தீவிரமாகியுள்ளோம். இந்தியா தற்போது மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்நாடு தீவிரவாத தாக்குதலில் 50 பேரை இழந்துள்ளது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சரி செய்வது சற்று சிக்கலான விஷயம்.
|
1.3 டாலர் நிதியுதவி
இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏராளமான பிரச்சினை எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் அளித்து வரும் 1.3 பில்லியன் டாலர் நிதியுதவியை நான் நிறுத்திவிட்டேன்.
நிறுத்திவிட்டேன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் பாகிஸ்தான் தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. அவர்கள் நமக்கு உதவாத போது நாம் ஏன் அவர்களுக்கு நிதியுதவியை அளிக்க வேண்டும். அதனால்தான் நிறுத்திவிட்டேன் என்றார் டிரம்ப்.