2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவேன்... டொனால்ட் டிரம்ப் தடாலடி
வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் தடலாடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை தழுவினாலும் அதை ஏற்க முடியாமல் இருந்து வந்தார்.
இதனால் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும் டிரம்ப் தரப்புக்கு பின்னடைவுதான் ஏற்ப்பட்டது. இதனால் அதிகாரங்களை ஜோ பிடனிடம் ஒப்படைத்துவிட்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தால் டிரம்ப்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்ப் மிக நீண்ட உரையாற்றினார். அதில், இந்த 4 ஆண்டுகளும் மிக சிறப்பானவை. மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து இருக்கவே முயற்சிக்கிறோம். அது சாத்தியம் இல்லை எனில் அடுத்த 4-வது ஆண்டில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என கூறினார்.
டொனால் டிரம்ப்பின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2024-ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலிம் தாம் மீண்டும் போட்டியிடப் போவதையே அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.